நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமி... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மானந்தவாடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வனத்துறை ஊழியரான இளம் பெண்ணின் 3 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றார் மர்ம நபர் ஒருவர்... இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்... இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காயங்குளம் பகுதியைச் சேர்ந்த சஜித்குமார் மற்றும் அவரது திருட்டு செயல்களுக்கு உதவி செய்து வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த அவரது மனைவி அம்பிகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான சஜித் குமார் மீது ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்