கடைமுன் தூங்கி கொண்டிருந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பழிவாங்கும் நோக்கில் கல்லால் அடித்து கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடைக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் ஷா ஷபீக். இவர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த ஷபீக் என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனால். ஆத்திரத்தில் இருந்து ஷா ஷபிக், திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள கடையின்முன் படுத்திருந்த ஷபீக்கை கல்லால் அடித்து கொலை செய்ய முன்றாார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷா ஷபிக்கை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்