வளைத்து வளைத்து பைக் ஓட்டியவரால்.. பின்னால் பைக்கில் மகனுடன் வந்த தாய் பலி - அதிர்ச்சி காட்சி

x

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூனிமேடு பகுதியைச் சேர்ந்த ஜீனத் பேகம், தனது மகன் அப்துல்ரசாத்துடன், ஈசிஆர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவர்களது இரு சக்கர வாகனம், முன்னால் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த கார் இருவர் மீதும் மோதியது. இதில், படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜீனத் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்