தன் குழந்தையை தத்து கொடுத்து விட்டு தவியாய் தவித்த தாய் - காண்போரை கலங்க வைத்த வீடியோ

x

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டிட வேலைக்கு செல்லும் இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 25 ஆண்டுகளாக குழந்தையின்றி தவித்த சீனிவாசன், கனகரத்தினம், தம்பதி மூன்றாவதாக பிரேமாவுக்கு பிறந்த குழந்தையை தத்து எடுத்தனர். பத்திரம் ஒன்றின் மூலம் குழந்தையை எழுதி கொடுத்து தத்து கொடுத்த பிரேமா, ஒரு மாதத்திற்கு பிறகு குழந்தை நினைவாக தவித்து வந்துள்ளார். இதனையடுத்து,

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து குழந்தை தத்தெடுப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இருவரிடமும் விசாரணை நடத்திய பின்னர், குழந்தையை தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து பெற்று உண்மையான பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு மாதம் பாசமாக வளர்த்த குழந்தையை கொடுக்க மனமின்றி கனகரத்தினம் கண்ணீர் விட்டு அழுதார்.


Next Story

மேலும் செய்திகள்