தனக்குத்தானே சூனியம் வைத்த கும்பல்...நெல்லையில் பரபரப்பு

x

திருநெல்வேலி மாநகரில் உள்ள பட்டாசு கடைகளில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகரில் உள்ள பட்டாசு கடைகளில், வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து டவுன் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த எட்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, கடையின் உரிமையாளர்களான ஆறுமுகம், அந்தோணி ராஜ், ஆனந்தி, மலையரசி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, டவுன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது காரில் வந்த கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற நிலையில், பட்டாசு கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்