கேள்வித்தாளில் மூன்று கேள்விகளில் குளறுபடி - "மூன்று மதிப்பெண் வழங்கிடுக"-தேர்வுத்துறைக்கு கோரிக்கை

x

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான https://youtu.be/fsZ9CDabb6cஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 3 கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடந்தது. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் , மாணவர்கள் விடையளிப்பதில் திணறினர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஒரு மதிப்பெண் வினாவிற்கான 4,5,6 கேள்விக்கான விடையில் Synonyms, antonyms இரண்டும் இருப்பதால் மாணவர்கள் விடையளிக்க சிரமப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்