திடீரென வீட்டில் புகுந்த மனநலம் குன்றிய நபர் - விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது பலி என புகார்- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

x

அருப்புக்கோட்டை MDR நகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பதும், மனநிலை சரியில்லாததால் அப்படி நடந்து கொண்டார் எனவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தங்கப்பாண்டி விடுவிக்கப்பட்டு, உறவினர்கள் உதவியுடன் மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.

இதனிடையே, விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவரை விடுவித்தது தொடர்பாக, MDR நகர மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கபாண்டியன், இரவு 3 மணியளவில் மீண்டும் மனநல காப்பகத்தில் அழைத்து வந்து விடப்பட்டுள்ளார்.

சற்று நேரத்தில் தங்க பாண்டியனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள், விசாரணைக்கு அழைத்துச் சென்று தங்கபாண்டியனை அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்