ஆசை ஆசையாய்... கர்ப்பிணி மனைவிக்கு உணவு வாங்க சென்றவர் பைக் மோதி... ரோட்டிலேயே துடி துடித்துபலி -சென்னையில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த அய்யனார் என்பவர், தனது 7 மாத கர்ப்பிணி மனைவிக்கு மதிய உணவு வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வீராணம் சாலையில் திரும்பியபோது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், அய்யனார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கேரளாவை சேர்ந்த சைன் அப்துல்லா என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்