இளைஞரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர் - கேரளாவில் அரங்கேறிய அடுத்த அதிர்ச்சி

x

கேரள மாநிலம் காசர்கோட்டில் இளைஞரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஒடிய நபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். காசர்கோட்டை சேர்ந்த பாரூக் என்பவர், சந்தையில் இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, ஆட்டோவில் சென்ற அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பின் தொடர்ந்துள்ளனர். போலீசார் பின் தொடர்வதை உணர்ந்த பாரூக் அருகே இருந்த மருத்துவமனைக்குள் புகுந்துள்ளார். எனினும் விடாத போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்

A man who stabbed a young man and entered the hospital - the next shock in Kerala


Next Story

மேலும் செய்திகள்