எலி வாலில் கல்லை கட்டி சாக்கடையில் மூழ்கடித்து கொன்ற நபர் - வெளியான காட்சிகள்

x
  • உத்தரப்பிரதேசத்தில், எலியைக் கொன்ற நபர் மீது 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், மண்பாண்டத் தொழிலாளியாக பணியாற்றி வரும் மனோஜ்குமார் என்பவர், எலியின் வாலில் கல்லை கட்டி சாக்கடையில் மூழ்கடித்து சாகடித்தது போன்ற வீடியோ வெளியானது.
  • இதன் அடிப்படையில், விலங்குகள் நல ஆர்வலர் விகேந்திர குமார் புகார் அளித்தார்.
  • இதனையடுத்து, மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உள்ளூர் நீதிமன்றம் மனோஜ் குமாருக்கு ஜாமின் வழங்கியது.
  • எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சாக்கடையில் மூழ்கியதால் எலி இறந்தது தெரியவந்தது.
  • பிரேதப் பரிசோதனை மற்றும் உள்ளூர் மக்கள் சாட்சியத்தை கொண்டு, மனோஜ் குமார் மீது 30 பக்க குற்றப்பத்திரிகையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்துள்ளார்.
  • உத்தரப்பிரதேசத்தில் எலியை கொன்றதற்காக மனிதர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்ற பத்திரிக்கை இது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்