விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நான்கு வயது சிறுவனை, வெறிநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணகிரிசத்திரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, வெறி நாய் திடீரென கடிக்க முயன்றுள்ளது. இதில் நான்கு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஹோம்நாத் என்ற சிறுவனை தொடை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்