நடுரோட்டில் திடீரென சரிந்த லாரி... அப்பளமான ஆட்டோ..!- 2 பெண்களின் நிலை என்ன?

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே ட்ரெய்லர் லாரி சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இருங்காட்டுகோட்டை பகுதியில் இருந்து இரண்டு கான்கிரீட் இயந்திரங்களை ஏற்றிக் கொண்டு மத்திய பிரதேஷம் நோக்கி ட்ரெய்லர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புத்தூர் ராஜிவ் காந்தி நினைவகம் அருகே கான்கிரீட் இயந்திரங்கள் இரண்டும் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது சரிந்து விழுந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 2 பெண்களும் ஆட்டோ ஓட்டுநரும் அதிர்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்