லிப்ட் கொடுத்தவரை தாக்கிவிட்டு... காரில் பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம்

x

அருப்புக்கோட்டை அருகே காளையார் கரிசல் குளத்தைச் சேர்ந்தவர் முத்து செல்வம். இவர் தனது காரில் விருதுநகர் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது நார்த்தம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர், பாலவனத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். தெரிந்த நபர் என்பதால், முத்துசெல்வம் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளர். பின்னர் ஓரிடத்தில் இறக்கி விடவே, காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று, முத்துசெல்வத்தை தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணை கடத்திச் சென்றது. பின்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சிறுவன் உட்பட சீனிவாசன், ராம்குமார், ஜெயக்குமார், அழகுமுருகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபாகரன் மற்றும் விஜயன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்