பிளக்ஸை தொட்ட நொடியில் துடிதுடித்து பிரிந்த உயிர் - திடீர் சூறைக்காற்றால் நடந்த பயங்கரம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பேனரை அகற்றிய ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியரான ராஜாங்கம், அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சிக்காக மண்டபத்தின் வெளிப்பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், ராஜாங்கம் பேனரை அகற்றிய போது சூறைக்காற்றால் அது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்துள்ளது. அப்போது, மின்சாரம் தாக்கியதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்