போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் புகுந்த சிறுத்தை... வாகனத்தில் சிக்கி பின்னங்கால்கள் இரண்டிலும் காயம்

x

ஜெய்ப்பூர் அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் சிறுத்தை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது.

ராஜஸ்தான் மாநிலம் ஜவஹர் நகர் பகுதியில், வாகனத்தில் சிக்கி சிறுத்தையின் பின்னங்கால்கள் இரண்டிலும் காயம் ஏற்பட்டது.

இதனால் வனப்பகுதிக்கு செல்ல முடியாமல் அந்த சிறுத்தை, சாலையோர சுவர் அருகே தஞ்சம் அடைந்தது.

இதனிடையே, தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் புகுந்த சிறுத்தை.

வாகனத்தில் சிக்கி பின்னங்கால்கள் இரண்டிலும் காயம்


Next Story

மேலும் செய்திகள்