சாலையில் போட்டி போட்ட ஆட்டோ - ஓட்டுனர்கள் மீது பாய்ந்த சட்டம்

x

சேலத்தில் போட்டி போட்டுக் கொண்டு, அதிவேகமாக ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அபராதம் விதித்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த சின்னகடைவீதியில், சேலம் அம்மாபேட்டை பகுதியில் இருந்து பேருந்துநிலையம் நோக்கி சென்ற பயணிகள் ஆட்டோக்கள் இரண்டு, போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக செல்லும் வீடியோ வலைதளங்களில் பரவியது.

இதில் ஆட்டோக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு செல்லும்போது பொதுமக்களை இடிப்பது போன்று சென்றது.

இதையடுத்து, 2 ஆட்டோக்களின் பதிவு எண்ணை கொண்டு அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார்,இருவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்