"திமுகவுக்கு ஒரு சட்டம் -அதிமுகவுக்கு ஒரு சட்டமா?" - அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி

x

திமுகவை சேர்ந்த ராஜா குப்பம் முருகானந்தம் என்பவர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார் என கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டார்.

அதே பதிவை பகிர்ந்த அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை காட்பாடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஆறாவது நாளாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள அருண்குமாரின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இது குறித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, திமுகவுக்கு ஒரு சட்டம், அதிமுகவுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்