தலைக்கவசம் அணிந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

x

தஞ்சையில், தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. பொதுமக்களிடையே சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பில், தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது. தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இத்தகைய புதிய விழிப்புணர்வுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்