மகனுடன் சண்டையிட்ட சிறுவனை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து கொடூரமாக அடித்து துன்புறுத்திய கணவன், மனைவி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம், மண்ணைக்காடு பரப்பற்று பகுதியை சேர்ந்தவர் தவசுமணி. இவருடைய மகனான நிதிஷ் குமார் என்ற சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியணின் மகனான மற்றொரு சிறுவனுக்கும் கலர் மீன் வாங்குவதில் சிறு சண்டை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய மகனிடம் சண்டையிட்ட சிறுவனை தண்டிக்க வேண்டும் என்பதற்காக பாண்டியனும் அவருடைய மனைவியும் நிதிஷ் குமாரை வீட்டிற்கு ஆசையாக அழைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.அங்கிருந்து ஓடி வந்த நிதிஷ்குமார் நடந்ததை அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறவே இது தொடர்பாக அவர்கள் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை சித்ரவதை செய்த கணவன் மனைவியை தேடி வருகின்றனர். சிறு பிள்ளைகள் சண்டை இப்படி பெரிதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்