பெரு அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பேரணி...தலைநகரை முற்றுகையிடும் போராட்டம்

x

பெரு அரசாங்கத்திற்கு எதிராக தலைநகரை முற்றுகையிடும் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் காஸ்டில்லோவின் விடுதலையை வலியுறுத்தியும், தற்போதைய அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரியும் காஸ்டில்லோ ஆதரவாளர்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தலைநகர் லிமாவை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொண்டு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்