திடீரென இடிந்து விழுந்த வீடு... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்

x

வடசென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு மாடவீதி தெருவில் பஞ்சாட்சரம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடி மற்றும் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் வீட்டில் குடியிருந்த நிர்மலா என்பவரது பேரன் நவீன் கிஷோர் மற்றும் இரண்டு சிறுவர்கள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். சுதாரித்துக் கொண்ட நிர்மலா வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். இருந்தபோதும் நவீன் கிஷோருக்கு தலையில் அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இடிந்த பாகங்கள் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீதும் விழுந்தது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் கோவிலுக்கு சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


Next Story

மேலும் செய்திகள்