திருத்தணி முருகன் மூலஸ்தானத்திற்குள் புகுந்த குரங்கு கூட்டம்.. பதறிய பக்தர்கள்

x

திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தானத்திற்குள் குரங்கு புகுந்ததால் பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் மூலஸ்தானத்திற்குள் திடீரென குரங்கு ஒன்று புகுந்தது. இதனால் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். குரங்கை வெளியே விரட்ட ஊழியர்கள் போரடி வரும் நிலையில், பூஜை மற்றும் அபிஷேகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தணி கோவில் மலை பகுதிகளில் அதிகமாக காணப்படும் குரங்குகள் பக்தர்களை அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளதாகவும், குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் கோவில் நிர்வாகம் தவித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்