சாலையில் நடந்து சென்ற மீன் கூட்டம்.. அதிர்ச்சியில் வாய் பிளந்த கிராம மக்கள் - அதிர்ச்சி வீடியோ

x

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் சாலையில் ஊர்ந்து செல்லும் மீன் கூட்டங்களை பார்த்து கிராம மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்..

இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்.

வானத்திலிருந்து மழை மூலமாக கீழே விழுந்ததா ?

இல்லை அருகே உள்ள குட்டையில் இருந்து அடித்து வரப்பட்டதா குழப்பத்தில் கிராம மக்கள்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் வஜ்ரபு கோனேரு கிராமத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிராமத்தில் உள்ள சாலையில் ஏராளமான மீன்கள் ஊர்ந்து செல்கின்றன இதனைப் அந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் மேலும் இது வானத்தில் இருந்து மழை மூலமாக கீழே விழுந்ததா இல்லை அருகில் உள்ள குட்டையில் இருந்து அடித்து வரப்பட்டதா என்ற குழப்பத்தில் உள்ளனர் கிராம மக்கள் இருந்த போதிலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்