தவறி விழுந்த செல்போனால் சாலையில் நேருக்கு நேர் மோதிய அரசு பஸ் - லாரி... பயங்கர விபத்து காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஆண்டிப்பட்டி விலக்கு அருகே, இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது செல்போன் தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுப்பதற்காக அவர்கள் திடீரென பைக்கை நிறுத்திய போது பின்னால் வந்த ஆட்டோவும், காரும் அடுத்தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஆட்டோ மற்றும் கார் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வலது பக்கம் திருப்பிய போது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பினர்...


Next Story

மேலும் செய்திகள்