இளம்பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு - காவலர், வழக்கறிஞர் சேர்ந்து செய்த செயல்... | kanchipuram

x

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் பகுதியில் லதா என்பவரின் மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிகரெட் வாங்குவது போல பேச்சு கொடுத்துள்ளனர்... திடீரென அவர்கள் லதாவின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்... இது குறித்து லதா காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது நகை கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் வந்த வாகனம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஆரணி சென்ற போலீசார் திருட்டில் ஈடுபட்ட வழக்கறிஞர் கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் உடனிருந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த ஊர்காவல்படை காவலர் வேலாயுதம் என்பது கண்டறியப்பட்டது... இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 6 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்