ஆட்டோ ஓட்டுநர் செய்த ரகளை... தூக்கிட்டு இறந்த சிறுமி - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் விசிக பிரமுகர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குப்புபிள்ளைசாவடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் ராஜ் என்பவர், 17 வயது சிறுமியை தன்னுடன் அனுப்புமாறு, அவரது பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதற்கு விசிக பிரமுகர் பன்னீர்செல்வம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால், மனமுடைந்த அந்த சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில், இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்