24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை..கடவுளின் அவதாரமாம்...!

x

தெலங்கானாவில் கைகள் மற்றும் கால்களை சேர்த்து, 24 விரல்களோடு குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் மாவட்டத்தை சேர்ந்த ராவளி என்ற பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை முழுமையாக வெளியே வந்த பிறகு, அதன் கைகள் மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என 24 விரல்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிலர் அக்குழந்தை கடவுளின் அவதாரம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்