ஜவுளிக்கடையில் புகுந்து ஓனரை வாள் எடுத்து வெட்டிய கும்பல் - அலறிய மக்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

x

மும்பையில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைத்துனியில் கடை உரிமையாளருடன் வாக்குவாத‌த்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, வாள் எடுத்து கடை உரிமையாளரை மக்கள் மத்தியில் துரத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது அமீர் ரயிஸ் அகமது கான் மற்றும் விநாயக் ராஜூ படேல் என தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்