சேலையில் விளையாட்டு.. இறுதியில் விபரீதமானது - தலையில் அடித்து கதறிய சிறுவனின் அம்மா

x

கிருஷ்ணகிரி அருகே சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில் குமார் - அம்சவேணி தம்பதி. இவர்களின் 7 வயது மகன் எஸ்வந்த் , சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை இறுகி, எஸ்வந்தின் கழுத்தில் சிக்கி கொண்டதில், அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். மகனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத தாய் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்