'கண்மாயில் ஜாலியான குளியல்..' | 'திடீரென தோன்றிய எலும்புக்கூடுகள்..!' | தலைகால் புரியாமல் அலறி அடித்து ஓடிய மக்கள்

x

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கண்மாயில், அப்பகுதி மக்கள் குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் ஏதோ வெள்ளையாக கிடப்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்கு மனித எலும்புக்கூடுகள் நீருக்குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தள்ளனர். மனித எலும்பு மண்டை ஓடு, விலா எலும்புகள், கை, கால் எலும்புகள் என ஆங்காங்கே எலும்புகள் சிதறிக் கிடந்தன. தகவலின் பேரில் வந்த போலீசார், எலும்புக் கூடுகளை மீட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்