சதுரகிரியில் தொடர்ந்து 3 நாளாக எரியும் காட்டுத்தீ

x

சதுரகிரியில் 3வது வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரியில் காட்டுத்தீ பரவத் துவங்கியது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை காட்டுத்தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், காற்று அதிகமாக வீசுவதாலும் காட்டுத் தீயானது எரிந்து வருவதால் மீதியுள்ள தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்