மீண்டும் ஒரு கால்பந்து பயங்கரம் ...தொடரும் உயிர் பலி - போர்க்களமான மைதானம்

x

அர்ஜெண்டினாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் ரசிகர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பியுனஸ் எர்ஸ் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதைக் காண கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரசிகர்கள் அரங்கில் நிரம்பி வழிந்தனர்.

மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றனர்.

ரப்பர் துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்திய நிலையில், இதில் ஒரு ரசிகர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் காவல்துறையினரைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசிய கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 131 பேர் பலியான நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவத்தால் அர்ஜெண்டினாவில் ஒரு ரசிகர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்