15 ஆண்டுகளுக்கு பின் நடந்த சாதனை - வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை..கோர தாண்டவம் ஆடிய வெங்கடேஷ் ஐயர்

x

ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர், சதமடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரின் 22 வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட் செய்த நிலையில், அந்த அணி வீரர் வெங்கடேஷ் ஐயர், 51 பந்துகளில் 104 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். இதன்மூலம் கொல்கத்தா அணி சார்பில் சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையையும், வெங்கடேஷ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2008 ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், மெக்கல்லம் கொல்கத்தா அணிக்காக சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்