மகளின் காதலனை தீர்த்து கட்ட ராஜஸ்தான் ரவுடிகளை சென்னையில் இறக்கிய தந்தை.. கடைசியில் அவரே பலிகடாவான பரிதாபம்

x

சென்னையில் மகளின் காதலனை கொலை செய்வதற்காக ரவுடி கும்பலுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்த தந்தையையும், ரவுடி கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பட்டாளம் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்களை கைப்பற்றினர். மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குஜார், சோனு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கசிப் என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, ராஜஸ்தானில் இருந்து வந்து எம்.கே.பி.நகரில் தங்கியிருக்கும் மணிப்பால் சிங் என்பவர், தனது மகளை காதலித்த இளைஞரைக் கொல்வதற்கு இவர்களை அனுப்பியது தெரியவந்தது. இதற்காக, மணிப்பால் சிங்கிடம் இருந்து 5 லட்ச ரூபாயை வாங்கிய இளைஞர்கள், மகளின் காதலனைக் கொலை செய்யாமல் விட்டுள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் மணிப்பால் சிங் கேட்டபோது அவருக்கு இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இளைஞர்கள் மூவரையும், மணிப்பால் சிங் மற்றும் அவருக்கு உடைந்தாக இருவர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்