மது அருந்தி விட்டு மகன் ரகளை..மகனின் கைகால்களை கட்டி கிணற்றில் வீசிய தந்தை..மதுரையில் அரங்கேறிய கொடூரம்

x

மதுரையில் மது அருந்திவிட்டு தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை, கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்து உள்ள கொட்டகுடியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராஜ பிரபு தினமும் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் தனது மகனை கொலை செய்து, கை கால்களை கட்டி கிணற்றில் வீசிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட ராஜபிரபுவின் உடலை மீட்டனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பொன்னையா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்