பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி கொன்ற தந்தை... வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்..!

மதுவுக்கு அடிமையான மகனை தந்தையே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x

கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளியை சேர்ந்த நகைக்கடை அதிபர் அகில் என்பவரை சில நாட்களாக காணவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், அகில் காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக அவர் தந்தையுடன் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அகிலின் தந்தை பரத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகனை கண்டித்தும் கேட்காததால் கூலிப்படை ஏவி கொலை செய்ததாக பரத் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தந்தை பரத் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்