மகனை கொடூர முறையில் கொன்ற தந்தை. 'சொத்து தகராறா..? - ' வெளியான பகீர் தகவல்!

x
  • ஆத்தூர் அருகே சொத்து தகராறில் தன் மகனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. 60 வயதான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
  • இவருக்கு 2 மனைவிகள். இதில் 2வது மனைவியின் மகன் கணேசன் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.
  • கடந்த மாதம் தன் மனைவியை கத்தியால் குத்தி சிறையில் இருந்த பழனிசாமியை மகன் கணேசன் ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார்.
  • பின்னர் தான் செலவு செய்த பணத்தையும், தனக்கு சேர வேண்டிய சொத்தையும் பிரித்து தருமாறு தந்தையிடம் கேட்டிருக்கிறார் அவர்...
  • இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் தூங்கிக் கொண்டிருந்த தன் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார் பழனிசாமி. கணேசனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்