மின்னல் தாக்கி விவசாயி பலி

x

திருச்சி, மணப்பாறை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்த 65 வயதான விவசாயி வெங்கடாசலம், தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென வெங்கடாசலம் மீது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விவசாயியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்