வீடு வாசலை இழந்த குடும்பம்... பதுங்கு குழியில் குடி இருக்கும் குழந்தை

x

வீடு வாசலை இழந்த குடும்பம்... பதுங்கு குழியில் குடி இருக்கும் குழந்தை... பழைய நிலை திரும்பாத என எங்கும் தாய்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கார்கிவ் நகரில் பிறந்தது முதல் பதுங்கு குழியை தவிர வேறெதுவும் அறியாத ஆறு மாத குழந்தை குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் கூறுகையில், போரினால் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே தங்கள் வீட்டை விட்டு வெளியேறி இந்த பதுங்கு குழியில் தஞ்சமடைந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது இருந்து இந்த குடும்பம் இந்த பதுங்கு குழியிலேயே தங்கி வருகிறது. போரினால் உருகுலைத்துவிட்ட தங்கள் வீட்டை மீண்டு கட்டி குடியேறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என வருந்தும் அந்த குடும்பம், என்றாவது ஒருநாள் மீண்டும் தங்கள் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பாதா? என ஏக்கத்துடன் காத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்