கடன் தொல்லையால் நடுரோட்டில் நிற்கும் குடும்பம்...தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை..சென்னையில் அதிர்ச்சி

x

அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவர், தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கர்ப்பிணியான தனது மனைவியை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, வீடு திரும்பிய விமல் ராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்