ஆசிரமத்தில் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்

ஆசிரமத்தில் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்
x

குஜராத்தில் ஆசிரமத்தில் தங்கியிருந்த சிஷ்யையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலி சாமியார் அசராம் பாபு குற்றவாளி என காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குஜராத்தில் போலி சாமியார் அசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, சாமியார் தன்னை 6 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புகாரளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், 2014 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அசாராம் பாபு குற்றவாளி என காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரை விடுவித்தது.

அசாராம் பாபுவுக்கான தண்டனை விபரம் செவ்வாய் கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

போலி சாமியார் அசாராம் பாபு ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்