திருமணம் செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி... மன உளைச்சலால் குழந்தைகளைக் கொன்று தற்கொலை...

x

தற்கொலைச் செய்து கொண்ட தம்பதியின் பெயர் ஸ்ரீஜா மற்றும் ஷாஜி. ஆனால், இவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல… ஸ்ரீஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்… ஸ்ரீஜாவின் கணவரின் பெயர் சுனில்… சுனில் இருக்குபோதே ஷாஜியுடன் கள்ளதொடர்பில் இருந்துள்ளார் ஸ்ரீஜா. ஷாஜிக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கும் நிலையில் கள்ளக்காதலர்கள் இருவரும் குடும்பத்துக்கு தெரியாமல் ரகசிய காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள்.கிட்டதட்ட ஒரு வருடம் கடந்திருக்கிறது. தங்களது தெய்வீக காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல நினைத்த இந்த ஜோடி கடந்த 16 ஆம் தேதி கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீஜா ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்திருந்த நிலையில் ஹாஜி தன்னுடைய மனைவியை முறையாக விவாகரத்து செய்யவில்லை… இந்த சூழலில்தான் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் ஷாஜியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஷாஜியின் மனைவி கள்ளக்காதலர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். பிறகு ஸ்ரீஜா, தனது புது கணவனையும், தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் அழைத்து கொண்டு கண்ணூரிலுள்ள முன்னாள் கணவர் சுனில் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.சுனிலை விவாகரத்து செய்திருந்தாலும், அவரது குழந்தைகளை வளர்த்து வருவதால், முன்னாள் கணவர் சொத்தில் தனக்கும் பங்கிருக்கும் என்று ஸ்ரீஜா கணக்கு போட்டிருக்கிறார்.

தனக்கு துரோகம் செய்த மனைவி கள்ளக்காதலனுடன் தன் வீட்டிற்கே குடியேறியது சுனிலுக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. நேராக காவல் நிலையம் சென்ற, சுனில், ஸ்ரீஜாவை வீட்டைவிட்டு வெளியேற்றுமாறு புகார் கொடுத்துள்ளார்.புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் ஸ்ரீஜா மற்றும் ஷாஜியை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.திருமணத்துக்கு பிறகும் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல், குடும்பத்தார் நெருக்கடி கொடுத்தது, புது மண தம்பதிக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விபரீத எண்ணம் அவர்களுக்குள் விஷ விருட்சமாக படர்ந்துவிட்டது.சம்பவத்தன்று இரவு தனது மூன்று பிள்ளைகளையும் கொலைச் செய்து தூக்கில் ஏற்றிய ஸ்ரீஜா… காதல் கணவர் ஷாஜியோடு தூக்கிட்டு தற்கொலைச் செய்துகொண்டிருக்கிறார்.

பொழுது விடிந்தும் ஸ்ரீஜா வீட்டைவிட்டு வெளியே வராதது அக்கம்பக்கத்திலில் இருந்தவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஜன்னல் வழியே வீட்டிற்குள் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நடந்த விபரீதம் புரிந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீஜாவின் குடும்ப தற்கொலைக்கு பின்னால் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்