வலையில் சிக்கிய டால்பின்...மனம் கேட்காமல் மீனவர்கள் செய்த செயல் - நெகிழ்ந்து பாராட்டிய அதிகாரிகள்

x

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மீனவர் வலையில் சிக்கிய டால்பின், பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது. வாலிநோக்கம் கடற்பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 50 கிலோ எடையுள்ள ஆண் டால்பின் சிக்கியுள்ளது. கரைக்கு வந்த மீனவர்கள் டால்பினை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். தகவலறிந்த கீழக்கரை வனச்சரக அலுவலர் கனகராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் மீனவர்களைப் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்