டிப்ளமோ படிக்கும் இளைஞர் பப்ஜிக்காக செய்த பகீர் காரியம்

x

பொள்ளாசி அருகே பப்ஜி விளையாட பணம் இல்லாததால், பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே வடபுதூரை சேர்ந்த சரோஜா என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், விலாசம் கேட்பதை போல் பேசிய அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இது குறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சரவண் என்ற இளைஞரை கைது செய்ததுடன், அவர் பறித்து சென்ற 5 சவரன் தங்க சங்கிலியை மீட்டனர். விசாரணையில், டிப்ளமோ படித்து வந்த சரவண், பப்ஜி விளையாட பணம் தேவைப்பட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்