மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்

x

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளி பெண் தன் மகனுடன் வந்து கோரிக்கை மனு அளித்தார். சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. மாற்றுத்திறனாளியான இவருக்கு ராமசாமி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இவர்களது மகன் 1 வயது குழந்தையாக இருக்கும் போது, தனது மனைவியை ராமசாமி விட்டுச் சென்றுள்ளார். இவரை உடன் பிறந்தவர்களும் கைவிட்டுள்ள நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக அரசு சார்பில் குடியிருக்க வீடு அல்லது சுயதொழில் செய்வதற்கான பொருளாதார உதவி செய்து தருமாறு பானுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்