நாகையில் வெளிநாட்டுப் பறவைகளின் ரம்மியமான காட்சி

x

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்து வருகின்றன.

பறவைகளின் நூழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்...

அந்த வகையில், தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலை வாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்தடைந்துள்ளன...

மழை பெய்து பசுமையான சூழல் நிலவும் கோடியக்கரையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது


Next Story

மேலும் செய்திகள்