வசந்த உற்சவத்தில் ஓய்யார நடமானடிய தியாகராஜர் சுவாமி. காண திருவொற்றியூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

x

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில், இரு தினங்களுக்கு முன்னர் வசந்த உற்சவம் தொடங்கியது. இதையொட்டி, மூலவர் தியாகராஜர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, உட்பிரகாரங்களை வலம் வந்து வசந்த குளத்தின் அருகே, 9 முறை ஓய்யார நடமானடினார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். வரும் 19-ஆம் தேதிவரை, வசந்த உற்சவம் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்