ஆந்திரா டூ சென்னைக்கு வந்த தம்பதி.. ரூ.60 லட்சத்தை வழப்பறி செய்த‌தாக புகார் - கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கிய போலீஸ்

x

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், நகைவாங்குவதற்காக ஆந்திரவிலிருந்து வந்த தம்பதியிடம் 60 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சுப்பாராவ் லட்சுமி தம்பதியினர், என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் நகை வாங்குவதற்காக மாதவரம் வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து ஆட்டோ மூலம் கொருக்குப்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், தம்பதியரிடம் இருந்து 60 லட்சம் ரூபாயை பறித்துவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்க்ள ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கண்காணிப்புக்கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், தம்பதியர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்திருப்பதால், வழிப்பறி நடந்த‌து உண்மையா? அல்லது நாடகமா? என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்