ரயில்வே கேட்டில் மோதிய கன்டெய்னர் லாரி....கரூர் அருகே பரபரப்பு

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரயில்வே கேட்டில் மோதிய கன்டெய்னர் லாரியால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலை இடையே உள்ள ரயில்வே கேட்டில், வாகனங்கள் மோதி பழுதாவது, வழக்கமான நிகழ்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குளித்தலையிலிருந்து-மணப்பாறை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, ரயில்வே கேட்டை கடக்கும் போது கேட்டில் மோதி நின்றது. இதனால், சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்