விளையாடி கொண்டிருந்த குழந்தை வடிகால் குட்டையில் மூழ்கி பலி

x

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 2 வயது ஆண்குழந்தை, வடிகால் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்வழுதி என்பவரின் இரண்டு வயது ஆண் குழந்தை ரட்சன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போயுள்ளான். இதையடுத்து, குழந்தையை குடும்பத்தினர் தேடிய நிலையில், வீட்டின் அருகே இருந்த வடிகால் குட்டையில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்